E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0589/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 589/ '16

      கௌரவ புத்திக்க பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையின் வன ஒதுக்கங்களினுள் கொண்டுநடாத்தப்படும் ஹோட்டல் தொழில்களுடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி தொழில்முயற்சிகளுக்கு வன பரிபாலனத் திணைக்களத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேற்படி நிறுவனங்களினால் வனங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி நித்தமும் பரிசோதிக்கப்படுகின்றதா என்பதையும்;

      (ii) ஆமெனின், அது எந்த விதத்தில் என்பதையும்;

      (iii) மேற்படி (i) மற்றும் (ii) தொடர்பாக செயற்பாடுகளின்போது வனங்களின் அழிவுக்கு ஏதுவாகும் வகையில் செயலாற்றுகின்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனின், அந்நிறுவனங்கள் மற்றும் வழங்கப்பட்ட தண்டனைகள் தனித்தனியே யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-16

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks