பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
857/ '16
கௌரவ புத்திக்க பத்திறண,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நில்வளா திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் காணிகள் இக் கருத்திட்டத்திற்கு சுவீகரிக்கப்பட்டதென்பதையும்;
(ii) மேற்படி சுவீகரிப்பின் பின்னர் இதற்கு உரிய முறையியலின் கீழ் இருமடித்தாள் தயாரிக்கப்படவில்லையென்பதையும்;
(iii) எனவே கருத்திட்டத்திற்குரிய காணிகள் வேறு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வருகிறதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) நில்வளா திட்டத்திற்கு சுவீகரிக்கப்பட்ட தோட்டக் காணி மற்றும் வயல் காணிகளின் அளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(ii) இக்காணிகளில் ஒழுங்கான முறையில் இருமடித்தாள்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
(iii) நில்வளா திட்டத்திற்குரிய காணிகள் பற்றி மீள் கணிப்பீடொன்றை மேற்கொள்வாரா என்பதையும்;
(iv) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) காணிகளின் முறைகேடான பயன்பாடு பற்றி முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) இம்முறைப்பாடுகள் தொடர்பாக மேகொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-02-20
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks