E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0984/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

    1. 984/ '16

      கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

      (அ) (i) தற்போது இலங்கையிலுள்ள மின் பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) இலங்கையின் மின் பாவனையாளர்களில், இலங்கை மின்சார சபையினால் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தினால் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மின்வலு, புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரினால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படுவதாக அண்மைக் காலத்தில் கூறப்பட்ட சூட்டிகை மின் மானிகளின் (Smart Meters) மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் யாவையென்பதையும்;

      (ii) தற்போது பொருத்தப்பட்டுள்ள சூட்டிகை மின் மானிகளின் (Smart Meter) எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) மேலே (ஆ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவின் பிரகாரம் இலங்கையின் அனைத்து மின் பாவனையாளர்களுக்கும் மேற்படி சூட்டிகை மின்மானிகளை வழங்கி முடிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-29

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-03-24

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks