E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1021/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டி.வீ. சானக, பா.உ.

    1. 1021/ '16

      கௌரவ டி.வி. சானக்க,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாந்தோட்டை உலர் வலய தாவரவியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட மொத்தப் பணத்தொகை யாது என்பதையும்;

      (ii) மேற்படி பூங்காவானது, பேராதனை, ஹக்கல மற்றும் செனரத்கொட பூங்காக்கள் நிர்மாணிக்கப்பட்டு எவ்வளவு காலத்தின் பின்னர் நிர்மாணிக்கப்பட்டது என்பதையும்;

      (iii) மேற்படி பூங்கா திறந்துவைக்கப்பட்ட பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இது பெருமளவில் கவர்ந்துள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி பூங்காவுக்கு உரித்தான நிலப் பகுதியை சீன அரசுக்கு கையளிப்பதற்கான ஆரம்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதை அறிவாரா என்பதையும்;

      (ii) அவ்வாறு கையளிக்கப்படும் பட்சத்தில், மேற்படி பூங்காவை நிர்மாணிப்பதற்குச் செலவான பணத்தொகைக்கு யார் பொறுப்புக் கூறுவார் என்பதையும்;

      (iii) அவ்வாறு கையளிப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-30

கேட்டவர்

கௌரவ டி.வீ. சானக, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks