பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின், புனானை நீராம் கிராமத்தில் தற்சமயம் 1837 குடும்பங்கள் வசிக்கின்றனவென்பதையும்;
(ii) மேற்படி குடும்பங்களில், 780 குடும்பங்களுக்கு இற்றைவரையில் நிரந்தர வீடுகள் கிடைக்கவில்லையென்பதுடன், 391 குடும்பங்கள் பெண்களை குடும்பத்தலைவர்களாக கொண்ட குடும்பங்களாகும் என்பதையும்;
(iii) மேற்படி கிராமங்களுக்கு அநேகமான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதென்பதையும்;
(iv) அநேகமான கிராமவாசிகளுக்கு காணி உரிமப்பத்திரங்கள் இன்மை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதென்பதையும்;
(v) குறிப்பாக பெண்களை குடும்ப தலைவர்களாக கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இம்மக்களின் மேற்படி தேவைப்பாடுகள் தொடர்பில் இற்றைவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின், அவை ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் முடிவுறுத்தப்படும் திகதி யாதென்பதையும்;
(iii) இற்றைவரையில், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனில், இப்பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-07
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-06-07
பதில் அளித்தார்
கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks