பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிரேஷ்ட பிரசைகளின் ரூபா 1.5 மில்லியன் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 15% வட்டியை வழங்கக் கோரும் சுற்றறிக்கையொன்று அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதென்று 2016.11.21 ஆந் திகதி அல்லது அதை அண்மித்த திகதியொன்றில் தொலைக்காட்சி நேர்காணலொன்றின் போது அப்போதைக்கு இருந்த நிதி அமைச்சர் குறிப்பிட்டார் என்பதையும்;
(ii) அதற்கு மாறாக, தேவையான அறிவுறுத்தல்களுடன் சுற்றறிக்கைகளை இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பியதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிடப்பட்ட அந்த பணிப்புரையை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று குறிப்பிட்டதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) 2017.01.31 ஆந் திகதி வரைக்கும் அரச வங்கிகள் உள்ளடங்கலாக அனைத்து வங்கிகளும் அந்த சுற்றறிக்கையை அமுல்படுத்தியிருக்கவில்லை என்பதையும்;
(ii) அதனால் சிரேஷ்ட பிரசைகளுக்கு ஏற்பட்ட நட்டம் இலட்சக்கணக்கான ரூபாய்களாகும் என்பதையும்;
அவர் அறிவாரா?
(இ) (i) வங்கிகளால் அமைச்சரின் சுற்றறிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை அல்லது அடிப்படையையும்;
(ii) அமைச்சர் 2015 நவம்பர் மாதத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கிணங்க எந்தத் திகதியிலிருந்து இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைபபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதையும்;
(iii) அமைச்சரின் குறிப்பிடப்பட்ட அந்த பணிப்புரை விடுக்கப்பட்ட திகதியிலிருந்து சிரேஷ்ட பிரசைகளுக்கு இழப்பீடுகளை கௌரவ அமைச்சர் செலுத்துவாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-24
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-07-25
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks