E   |   සි   |  

2025 மே 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்களின் நடத்தை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக விசேட குழுவின் நியமனம்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
3 : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றும் உறுப்பினர்களுக்கான செயலமர்வு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகளும் தொழிற்பாடுகளும்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நாமல் சுதர்சன -  இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே                    
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான்                    
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன தென்னகோன் - இரண்டு மனுக்கள்
(vii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க -  மூன்று மனுக்கள்
(viii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான சிக்கல்கள்

(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா

உப்பு உற்பத்தி மற்றும் ஆனையிறவு உப்பளம் தொடர்பான பிரச்சினைகள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் சட்டமூலங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டதுடன் 2 ஆம் இலக்க விடயம் மாத்திரம் சபையால் நிறைவேற்றப்பட்டது.:-

(i)    குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)
(ii)    வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்)


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ உபுல் கித்சிறி
(ii)    கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்


அதனையடுத்து, 1644 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூன் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks