E   |   සි   |  

2025 ஜூன் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் LXV ஆம் பகுதியையும்;  மற்றும்
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் XLV ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் ஆண்டறிக்கை.
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் வெகுமதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(v)    2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை.
(vi)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் ஆண்டறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா    -  மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்                   
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி                    
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண கமகே                    
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக - மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கனாத்
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ திசாநாயக்க


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ கே. காதர் மஸ்தான்

வடக்கிற்கான இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீள்ஆரம்பித்தல்

(ii) கௌரவ திலித் ஜயவீர

சுற்றுலாத் துறையிலுள்ள சிக்கல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர


அதனையடுத்து, 1641 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூன் 05ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks