E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0105/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 105/2024

      கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2024 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி பரீட்சையின் வினாத்தாள்கள் அல்லது வினாத்தாள்களில் உள்ளடங்கியுள்ள வினாக்கள், மேற்படி பரீட்சை நடைபெற்ற திகதிக்கு முன்னர் வெளித்தரப்பினருக்கு கிடைக்கப்பெற்றுள்ளனவா என்பதையும்;

      (iii) ஆமெனில், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (v) மேற்படி பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (vi) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-24

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks