E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0253/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.

    1. 253/2024

      கௌரவ ரவீந்திர பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஹப்புத்தளை மற்றும் ஹல்தமுல்லை பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளின் அளவு ஹெக்டயார்களில் ​எவ்வளவு என்பதையும்;

      (ii) அக்காணி அளவு ஒவ்வோர் கிராம அலுவலர் பிரிவின் பிரகாரம் ​ ஹெக்டயார் அளவில்​ வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி காணிகளில் இரண்டாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு ஹெக்டயார்களில் ​எவ்வளவு என்பதையும்;

      (iv) அவ்வொவ்வோர் இரண்டாம் தரப்பினரதும் பெயர், அத்தரப்பினருக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள இடம் மற்றும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை என்பவை வெவ்வேறாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமற்ற அரச காணிகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அளவுகள் ஹெக்டயார்களில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (ii) மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளில் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ள விவசாயக் காணிகளின் அளவு ஹெக்டயார்களில் எவ்வளவு என்பதையும்;

      (iii) அக்காணிகளுள் இன்றளவில் பயிர்ச்செ​ய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காணிகளின் அளவு ஹெக்டயார்களில் எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-21

கேட்டவர்

கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks