E   |   සි   |  

 திகதி: 2025-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0298/ 2025 - கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 298/2024
      கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையில் நுகர்வுக்காக வருடமொன்றுக்கு தேவைப்படும் உப்பின் அளவு யாதென்பதையும்;
      (ii) மேற்படி அளவிலான உப்பை பெற்றுக்கொள்ளும் வழிவகைகள் யாவையென்பதையும்;
      (iii) உப்பு உற்பத்திச் செய்யும் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
      (iv) எப்பிரதேசங்களில் அதிகளவில் உப்பு உற்பத்திச் செய்யப்படுகின்றது என்பதையும்;
      (v) உற்பத்தி செய்யப்படும் உப்பினை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலைகள் அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;
      (vi) மேற்படி களஞ்சியசாலைகளின் கொள்திறன் மற்றும் அக்கொள்திறன் போதுமானதாக அமையும் கால அளவு என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) 2024.01.01 ஆம் திகதி தொடக்கம் தற்போதுவரை இலங்கைக்கு உப்பு இறக்குமதிச் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
      (ii) ஆமெனில், உப்பு இறக்குமதிச் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை மற்றும் மேற்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதிச் செய்யப்பட்ட உப்பின் அளவு என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;
      (iii) உப்பு இறக்குமதிச் செய்யப்பட்டமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-25

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks