E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2802/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2802/ ’12

       

      கெளரவ தயாசிறி ஜயசேகர,—  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     பண்டுவஸ்நுவர கிழக்கு மற்றும் மேற்கு பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களை இலக்காகக் கொண்டு தும்பினாலான பாத்திரங்களை உற்பத்தி செய்யும் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;

      (iii) அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படிக் கருத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (v) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்படி கருத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த உற்பத்தி வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (vi) மேற்படி உற்பத்தியைக் கொள்வனவு செய்யயும் நிறுவனங்கள் யாவையென்பதையும்;

      (vii) தற்போது இந்தக் கருத்திட்டம் பெற்றுள்ள முன்னேற்றம் யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2013-06-21

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-02

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks