E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2803/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2803/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,— கடற்றொழில் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)    தகர மீன் தயாரிப்புக்காக காலியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையின்,

                 (i)     ஆரம்பத் திகதி யாதென்பதையும்;

                 (ii)    உரிமையைக் கொண்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;

      (iii) எதிர்பார்க்கப்படும் வருடாந்த உற்பத்தி எவ்வளவென்பதையும்;

      (iv) அடைப்பதற்காக பயன்படுத்தப்படும் மீன் வகை அல்லது வகைகள் யாவையென்பதையும்;

      (v) நாளாந்த மீன் தேவைப்பாடு எவ்வளவென்பதையும்;

      (vi) உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மேற்கூறிய மீன் வகைகளின் அல்லது வகையின் உள்நாட்டு நாளாந்த விளைச்சல் எவ்வளவு என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்கூறிய தகர மீன் தொழிற்சாலைக்குத் தேவைப்படும் மீன்கள் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்;

      (ii) இன்றேல், அவ்வாறு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) மேற்படி மீன்கள் இறக்குமதி செய்யப்படும் அல்லது அவ்வாறு செய்ய எதிர்பார்க்கப்படும் நாடுகள் யாவை என்பதையும்;

      (iv) மாதாந்தம் இறக்குமதி செய்யப்படும் அல்லது அவ்வாறு செய்ய எதிர்பார்க்கப்படும் மீனின் அளவு எவ்வளவு என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-21

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-02

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks