E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1501/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

    1. கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) புத்தளம் மாவட்டத்தில், முந்தலம் பிரதேச செயலாளர் பிரிவில், "சமீரகம மாதிரிக் கிராமம்" அமைக்கப்பட்ட ஆண்டு யாது;

      (ii) அதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுவீகரிக்கப்பட்ட காணியின் மொத்த பரப்பளவு எவ்வளவு;

      (iii) அதில் காணி பெறுநர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, இக்காணி பெறுநர்களில் தற்போது நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இனங்காணப்பட்டிருக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் உப குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

      (iv) குடியிருப்பாளர்களில் இனங்காணப்பட்ட உப குடும்பங்களின் நிரந்தரக் குடியிருப்புக்காக காணித் துண்டுகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவாரா;

      (v) காணி பெறுநர்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-08

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-08

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks