E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1797/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1996 ஆம் ஆண்டு பொலீஸ் உபசேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள், 2006 ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தினால் நிரந்தர சேவையில் உள்ளீர்த்துக்கொள்ளப்பட்டனரா என்பதையும்;

      (ii) ஆமெனில், நிரந்தர சேவையில் உள்ளீர்த்துக்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர் களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) அவ்வாறு நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர் களுக்கு 1996 ஆம் ஆண்டு தொடக்கம் உரிய முறையில் சேவைச் சிறப்புரிமைகள் உரித்தாகின்றதா என்பதையும்;

      (iv) இன்றேல், அந்த உத்தியோகத்தர்கள் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட திகதிக்கும், நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட திகதிக்கும் இடையிலான 10 வருட காலப்பகுதியைப் புறக்கணிப்பதன் மூலம் அந்த உத்தியோகத்தர்களுக்கு பாரிய அநீதி ஏற்படுமென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-22

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks