E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2496/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 2496/ '17

      கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இந்த ஆண்டின் முதல் போகத்தில் மேல் மாகாணத்தில் பயிரிடப்பட்ட மொத்த வயற் காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

      (ii) மேல் மாகாணத்தில் பயிரிடப்படாது தரிசு நிலமாக மாறிய வயற் காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

      (iii) பயிரிடப்படாமல் தரிசு நிலமாக மாறிய வயற் காணிகளின் மூலம் நாடு இழந்த நெல் மெற்றிக் தொன் அளவு எவ்வளவென்பதையும்;

      (iv) பயிரிடப்பட்ட நிலையில், சேதமடைந்த வயல் காணிகளின் ஹெக்டெயார் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

      (v) ஏற்பட்ட சேதம் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கு/குறைப்பதற்கு எடுக்கப்பட்ட காலத்திற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (vi) பயிர் சேதமடைந்தமையால் நிர்க்கதியான விவசாயிகளுக்கு இழப்பை ஈடுசெய்வது எப்போது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) பயிரிடப்படாத வயல்களை வேறு பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்படுமா என்பதையும்;

      (ii) ஆமெனின், இது பற்றி சாத்தியவளக் கற்கையொன்று மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;

      (iii) மேற்படி சாத்தியவளக் கற்கையின் முடிவு யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-06

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks